இலங்கையின் சகல மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்களும் பங்குபற்றும் மாநாடு யாழ். செயலகத்தில் இன்று காலை 9.00 மணியளவில் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன கலந்துகொள்கிறார். மாநாடுகளில் கலந்துகொள்வதற்காக நேற்று மாலையே அரசாங்க அதிபர்கள் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார்கள். இத் தகவல்களை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இது விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு : அரச அதிபர்கள் [...]
Archive for the ‘செய்திகள்’ Category
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் அன்னையின் மடியில் -2010 வருடாந்த ஒன்றுகூடல்
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் யாழ்ப்பாணம் பழையமாணர் சங்கத்தினர் அன்னையின் மடியில் -2010 என்ற வருடாந்த ஒன்றுகூடல் ஒன்றினை கல்லூரியில் ஏற்பாடுசெய்திருக்கின்றனர் இந்நிகழ்வு எதிர்வரும் 12ம்திகதி காலை கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் ஆரம்பமாக உள்ளது. இந்நிகழ்வில் உலகளாவிய ரீதியில் பரந்துவாழும் சகல பழையமாணவர்களையும் அணிதிரளுமாறு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழையமாணவர் சங்கத்தினர் கோருகின்றனர் இதற்காக முன்பதிவுகளை www.jhcobajaffna.com/reg/ என்ற முகவரியில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டிருக்கின்றனர். பழையமாணவர்கள் தமது குடும்ப சமேதர்களாக இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமது நினைவுகளை மீட்டும் அதேவேளை பரஸ்பரம் பழைய உறவுகளை புதுப்பித்துக்கொள்ளவும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி [...]
மீளக்குடியேற்றுமாறு இராமாவில் முகாம் மக்கள் கோரிக்கை
மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகத் தம்மை சொந்த இடங்களில் மீளக்குடியேற்றுமாறு இராமாவில் நலன்புரிநிலையத்தில் தங்கியுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியில் அமைந்துள்ள இராமாவில் நலன்புரி நிலையத்தில் 702 குடும்பங்களைச் சேர்ந்த 2,272 பேர் தங்கியுள்ளனர். இவர்களில் அனேகமானவர்கள் வடமராட்சி கிழக்குப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்டவர்கள். இதுவரையும் இவர்கள் மீளக்குடியேறுவதற்கான அனுமதி கிடைக்காததால் 15 மாதங்களுக்கும் மேலாக இவர்கள் நலன்புரி நிலையத்திலேயே தங்கியுள்ளனர். நலன்புரி நிலையத்தில் பல்வேறு இன்னல்களுக்கும் அவர்கள் முகங்கொடுத்து வருகின்றனர். அண்மையில் பெய்த [...]
யாழ். குடாநாட்டில் இடம்பெறும் மின்வெட்டுக்கு முடிவு
யாழ். குடநாட்டில் பரவலாக இடம்பெற்றுவரும் மின்வெட்டுக்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் முடிவு காணப்படும் என்று இலங்கை மின்சாரசபையின் வடவலய உதவிப்பொது முகாமையாளர் எஸ். முத்துரட்ணானந்தம் தெரிவித்துள்ளார். நொதேர்ன்பவர் நிறுவனத்தின் இயந்திரம் பழுதடைந்தமையால் கடந்த 27ஆம் திகதி தொடக்கம் யாழ். குடாநாட்டில் அடிக்கடி மின்வெட்டு இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் குறித்த இயந்திரத்தின் திருத்தவேலைகள் நடைபெற்று வருகின்றன. எதிர்வரும் 5ஆம் திகதி தொடக்கம் சீரான முறையில் மின்சாரம் வழங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பார்வதி அம்மாளைப் பார்வையிட குவியும் சிங்கள மக்கள்!
வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வரும் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளைப் பார்வையிட தினமும் 200 வரையான சிங்கள மக்கள் படையெடுப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நோய்வாய்ப்பட்டு நீண்ட காலமாக சிகிச்சை பெற்றுவரும் பார்வதி அம்மாளைப் பார்வையிட தென்பகுதியிலிருந்து வருகை தரும் சிங்கள் மக்களின் ‘தொல்லை’ அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் பால், பழம், பிஸ்கட் போன்ற பொருட்களுடன் இவர்கள் பார்வதி அம்மாளைப் பார்ப்பதற்கு வருகை தருவதாகவும், அவர் நீராகாரம் மட்டுமே தற்போது [...]
நிருபமா ராவின் வருகை திருப்திகரமாக அமைந்தது: வலம்புரி நாளேடு ஆசிரியர் தலையங்கம்
யாழ்ப்பாணத்திற்கு நேற்று முன்நாள் வரருகை தந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் யாழ்.பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் சமயத் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்களைச் சந்தித்தபோது அவர் நடந்துகொண்ட முறை நெஞ்சம் நெகிழவைத்தது என யாழிலிருந்து வெளிவரும் வலம்புரி நாளேடு தெரிவித்துள்ளது. கடந்த முறை டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் யாழப்பாணம் வந்தபோது டி.ஆர் பாலுவை சனீஸ்வரன் எனக்குறிப்பிட்ட வலம்புரி நாளேடு நிருபமா ராவின் யாழ் வருகை திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது என இன்று வெளியிட்ட [...]
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். யாழ்.பொது நூலகத்தில் நேற்று இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் கலந்துகொண்ட நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். யுத்தத்திற்குப் பின்னராவது இந்தியா ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கும் என்ற தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை எனக் குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவித்ததாவது; இந்தியா, இந்திய-இலங்கை உடன்பாட்டை [...]
சகல வளங்களையும் அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும்: யாழில் விமல் வீரவன்ச உரை
பொது வசதிகள் மற்றும் வீடமைப்பு துறை அமைச்சர் விமல் வீரவன்ச இன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது அவர் யாழ்ப்பாண நூலகத்தை சென்று பார்வையிட்டுள்ளார். இதன் போது உரையாற்றிய அமைச்சர் விமல் வீரவன்ச 30 வருடங்களாக நிலவிய யுத்தத்தினால் கிடைக்காது போன சகல வளங்களையும் பெற்று கொடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். இந்தநிலையில் யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு தேவையான பெருந்தெருக்கள், மின்விநியோகம், விவசாயம், குடியிருப்புக்கள், உள்ளிட்;ட சகல வளங்களும் கிடைக்க [...]
பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்ய இந்தியா உதவி
பலாலி விமான நிலையம் மற்றம் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்வதற்கு இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்க உள்ளது. கடந்த காலங்களில் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது தமிழீழ விடுதலைப் புலிகளும், சில தமிழ் அரசியல் கட்சிகளும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போது, விமான நிலையம் மற்றும் துறைமுகம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்யும் யோசனைத் [...]
யாழ். விஜயத்தை இடைநடுவில் நிறுத்தி கொழும்பு திரும்பிய எஸ்.பி.திஸாநாயக்க
யாழ்ப்பாணத்திற்கு மூன்றுநாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்றிருந்த உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நேற்றுக்காலை தனது பயணத்தை இடைநடுவில் கைவிட்டு கொழும்புக்கு திரும்பியுள்ளார். அரசியலமைப்புத் திருத்த யோசனைகள் தொடர்பான விசேட அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளும் வகையிலேயே இவர் கொழும்பு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நேற்று பரமேஸ்வராக் கல்லூரியின் ஸ்தாபகர் ஞாபகார்த்த நிகழ்வு நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கா பிரதம விருந்தினராக கலந்து [...]

Posted in






