யாழ். நகரில் இருந்து காங்கேசன்துறை வரையான பிரதான வீதி (கே.கே.எஸ். வீதி) விஸ்தரிப்புத் தொடர்பாக சகல தரப்பு களுடனும் கலந்துரையாடிய பின்னரே தீர்க்கமான முடிவு எடுக்கப்படும்.
வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அவர், தமது அலுவலகத் தில் நேற்று நடத்திய கூட்டத்திலேயே இப் படிக் கூறினார்.
இக்கூட்டத்தில் இந்து மாமன்றத்தின் சார்பில் அதன் உபதலைவர் ஆறுதிருமுருகன்,முருகன், மன்றத்தின் யாழ். பிராந்திய பணி மனை நிர்வாக அலுவலர் வி.ஜெயசிங்கம், யாழ்.பல்கலைக்கழகத்தின் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் நா. சண்முக லிங்கன், விரிவுரையாளர் பொ. அகிலன் ஆகி யோர் கலந்துகொண்டனர்.
கே.கே.எஸ். வீதியை விஸ்தரிக்கும் தற் போதைய திட்டத்தினால் ஏற்படவுள்ள பாதிப்புகள் குறித்து கூட்டத்தில் பங்கு பற் றியவர்கள் ஆளுநருக்கு விளக்கிக் கூறி னார்கள்.இது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதி கார சபையினரையும், வேலை ஒப்பந்தகார ரையும் கல்லூரி அதிபர்களையும் ஆலய நிர்வாகிகளையும் அழைத்து எதிர்வரும் 10 ஆம் திகதி கூட்டம் ஒன்றை நடத்துவ தற்கு தாம் முடிவு செய்துள்ளதாகவும் அந்தக் கூட்டத்தில் ஆராய்ந்து தீர்க்கமான முடிவு ஒன்று எட்டப்படும் என்று ஆளுநர் உறுதியளித்தார்.
யாழ். – காங்கேசன் வீதி விஸ்தரிப்பு: சகல தரப்புகளுடனும் கலந்துரையாடிய பின்னரே தீர்க்கமான முடிவு என்கிறார் ஆளுநர்
Posted by thava on February 7th, 2010

Posted in 





