பாடசாலைகளை வியாபாரத்தலங்களாக மாற்றும் தென்பகுதி வியாபாரிகள்

தென்பகுதியில் இருந்துவரும் வியாபாரிகள் யாழ்ப்பாணத்தின் பாதையோரங்களில் நடைபாதை வியாபாரங்களை நடாத்தி, வீதி நெரிசல்களை ஏற்படுத்தியதோடு மட்டுமன்றி தற்போது பாடசாலைகளையும் அவர்களது வியாபாரத்தலங்களாக மாற்றியுள்ளனர். பாடசாலையில் பாடவேளையில் வியாபாரம் செய்வதற்கும் பாடசாலை நிர்வாகங்களும் அனுமதிக்கின்றனர்.

மேலும் பெரிய நிறுவனங்களில் இருந்துவரும் சந்தைப்படுத்தல் அதிகாரிகள் கருத்தரங்கு என்ற போர்வையில் மாணவர்களிடையே தமது நிறுவன சம்பந்தமான விளம்பரப்படுத்தல்களை செய்துவருகின்றனர் இதற்கு சில பாடசாலை நிர்வாகங்கள் தயக்கமின்றி அனுமதியளிக்கின்றனர் இதனால் மாணவர்களின் கல்விச்செயற்பாடுகளும் சீர்குலைகின்றன. இதற்குத் தகுந்த அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுப்பார்களா? என மாணவர்களும் பெற்றோர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

Responses are currently closed, but you can trackback from your own site.

Comments are closed.

Powered by WordPress | Free cell phones brand new for sale. | Thanks to Best at&t deals, Facebook Games and Conveyancing